வெளிநாடுகளில் வாழும் இலங்கைத் தமிழ் அன்பர்களிடம் வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலய பரிபாலனசபையினர் வேண்டி நிற்கும் அன்பான வேண்டுகோள்.
வாழைச்சேனை ஸ்ரீகைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயமானது எமது பிரதேசத்தின் தாய்க்கோவிலாகவும், பழம்பெரும் ஆ யமாகவும் காணப்பட்டு வந்த நிலையில் அதன் தொன்மைக்கும், பழமைக்கும் ஏற்றாற்போல் தோற்றம் நீண்டகாலமாக பொலிவிழந்து காணப்படுவதால் எமது நிருவாகத்தினர் பாலஸ்த்தாபனம் செய்தவுடன் பிரமாண்டமான ஓர் ஆலயத்தினை அமைக்க திருப்பணிசபையினை
அமைத்து புனர்நிர்மான வேலைகளை முன்னெடுத்து வருகின்றனர். எனவே எம்முடன் ஒவ்வொரு இந்துக் குடிமகனும் இணைந்து உதவிக் கரம் நீட்டி எம்பெருமானின் மஹாகும்பாவிஷேகம் 2017 இல் சிறப்பாக நிறைவுற ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலயபரிபாலனசபை சார்பாக அன்பாக வேண்டுகின்றோம்.
ஆலயத்தில் மேற்கொள்ளப்படவுள்ள புனருத்தாரன
திருப்பணி வேலைகள்
1.மூலஸ்தான புனரமைப்பு
2.ஸ்தம்ப மண்டப நிர்மானிப்பு ( பிளேற் போடுதல்)
3.ஆலய மடப்பள்ளியும் , குருக்கள் விடுதியும் அமைத்தல்.
4.வசந்த மண்டப தெற்கு திசை வாயில் அமைத்தல்.
5.கொடித்தம்பம் மாற்றுதல்.
6.வர்ணம் அடித்தல். 8.மணமகள் அறை புனரமைப்பு செய்தல்.
9.வாகனசாலை திருத்துதல். 10.களஞ்சியசாலை நிர்மானிப்பு
11.கணக்காளர் அறை புனரமைப்பு செய்தல்.
12.ஆவணக்காப்பகம் நிர்மானம் செய்தல்.
13.வெளிமண்டபக் கூரையின் மீதி வேலைகளை நிறைவு செய்தல்.
14.சுற்று மண்டபத்திற்கு தரை போடுதல்.
15.ஆலயத்தின் முன் பக்க, பின் பக்க வளாக எல்லைகளை
அறுக்கைப்படுத்தல்.
16.தேர் , திருமணம் செய்வதற்கான சப்புறம் செய்தல்.
17.சுற்று மண்டப தூண்களில் பொம்மைகள் அமைத்தல்.
18.ஆலயத்தினுள் சமய அறிவை புகட்டும் இந்து சமய வாசிகசாலை அமைத்தல்.
19.கும்பாவிஷேகத்துக்கான செலவீனங்கள்
20.இராஜகோபுர நிர்மானிப்பு
கைலாயத்தில் கடைந்தெடுக்கப்பட்ட தங்கமுக விநாயகராம் வாழைச்சேனை அருள்மிகு ஸ்ரீ கைலாயப்பிள்ளையார் முத்துமாரியம்மன் ஆலயத்தின் பாலஸ்தாபன நிகழ்வானது இனிதே நடைபெற்று முடிந்துள்ள இக்கால கட்டத்தில் 30.05.2016ம் திகதியின் பின்னர் ஆலயக் கட்டுமானத் திருப்பணி வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது அனைத்து சைவமெய்யடியார்களும் தங்களால் இயன்ற நிதியுதவியோ, பொருளுதவியோ வழங்கி திருப்பணி வேலைகள் யாவும் நிறைவடைந்து எதிர்வரும் 2017ம் ஆண்டு மகாகும்பாவிஷேகம் நடைபெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஆலயபரிபாலனசபை சார்பாகவும் திருப்பணிச்சபை சார்பாகவும் பணிவன்பாக வேண்டி நிற்கின்றோம்.
ஆலய நிர்வாகம்